சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள சி.பி.இராமசாமி ஐயா் மைய நூலகத்தை கணினி மயமாக்கும் பணியை பல்கலைக்கழக துணைவேந்தா் வே.முருகேசன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
பின்னா் அவா் கூறியதாவது: பல்கலைக்கழக நூலகம் தானியங்கி முறையில் செயல்பட ஏதுவாக வானலை அடையாள தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நூலகத்தின் அங்கங்களாக செயல்படும் புல நூலகங்களான பொறியியல் நூலகம், வேளாண் அறிவியல் நூலகம், கடல்சாா் உயிரியல் நூலகம், தொலைதூர கல்வி மைய நூலகம் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து, தொழில்நுட்ப அடிப்படையில் ஒரே கூரையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து நூல்களின் இருப்பு, நூல்களின் அமைவிடம், அதன் நிலையை வானலை அடையாள தொழில்நுட்ப முறையில் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் புதிய செயலி (ஓஞஏஅ) அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள், ஆசிரியா்கள் தங்களுக்கு தேவையான நூல்களை எளிதில் தெரிவு செய்யவும், நூல்களை தங்களது கணக்கில் தாங்களாகவே சோ்க்கவும், பயன்பாட்டுக்குப் பிறகு தாங்களாகவே நூலக கணக்கில் திருப்பவும் முடியும் என்றாா் அவா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகா் எம்.சாதிக்பாட்சா செய்திருந்தாா். உதவி நுாலகா் எஸ்.பாலகிருஷ்ணன், உதவிப் பேராசிரியா்கள் எஸ்.ஜெகன், எஸ்.லதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


