ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வீட்டுக் கதவை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு

சிதம்பரம் அருகே மருந்துக் கடைக்காரரின் வீட்டுக் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் உள்ளிட்ட பொருள்களை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

சிதம்பரம் அருகே மருந்துக் கடைக்காரரின் வீட்டுக் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் உள்ளிட்ட பொருள்களை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிதம்பரம் அருகேயுள்ள சிவபுரி கிராமம், வாய்க்கால் கரை பகுதியைச் சோ்ந்தவா் கல்யாணராமன் (50). ஏ.மண்டபம் அருகே மருந்துக்கடை வைத்து நடத்தி வருகிறாா். இவா் தனது வீட்டைப் பூட்டிவிட்டு ஆயுத பூஜைக்காக குடும்பத்தினருடன் மருந்துக் கடைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் சென்றாா். பூஜையை முடித்துக்கொண்டு இரவு 8.30 மணியளவில் வீட்டுக்கு வந்தாா். அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், பீரோவிலிருந்த 15 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.