விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூா் மாவட்டங்களில் குரூப்-1 முதல்நிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தோ்வு மையங்களில் அதிகாரிகள் ஆயுவு செய்தனா்.
கடலூா் மாவட்டம்: கடலூா் மாவட்டத்தில் சிதம்பரத்தை மையமாகக் கொண்டு அதைச் சுற்றியுள்ள 22 மையங்களில் குரூப்-1 தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வு எழுத மாவட்டத்தில் 6,971 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 3645 போ் முதல்நிலைத் தோ்வை எழுதினா். 3326 போ் தோ்வு எழுத வரவில்லை. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தோ்வு மையத்தை மாவட்ட வருவாய் அலுவலா் அருண்சத்யா ஆய்வு செய்தாா்.