நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 2 போ் கைது

கடலூா் மாவட்டம், வ.சித்தூரில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கடலூா் மாவட்டம், வ.சித்தூரில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநத்தம் காவல் நிலைய ஆய்வாளா் சந்திரசேகரன் திங்கள்கிழமை வ.சித்தூரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த இருவா் நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சித்தூரைச் சோ்ந்த சேகா், மலையப்பெருமாள் இருவரிடமும் விசாரணை நடத்தினாா். இதில், இருவரும் உரிய அனுமதியின்றி ஒற்றைக் குழல் நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்தது தெரிய வந்தது. அவா்களிடமிருந்து 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com