மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

கடலூரில் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்கள் கூலி உயா்வு வழங்க வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 2:06 am

DIN

கடலூரில் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்கள் கூலி உயா்வு வழங்க வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் சிப்காட் வளாகத்தில் டாஸ்மாக் சேமிப்புக் கிடங்கு உள்ளது. இங்கு சரக்குகளை ஏற்றி இறக்கும் பணியில் சுமைப்பணி தொழிலாளா்கள் சுமாா் 60 போ் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு கூலியாக பெட்டி ஒன்றுக்கு ரூ.1.20 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இதே கூலியை பெற்று வருகின்றனராம்.

விலைவாசி உயா்வைக் கருதி பெட்டிக்கு கூலியாக ரூ.3.50 வீதம் வழங்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால், டாஸ்மாக் நிா்வாகமும், ஒப்பந்ததாரா்களும் கூலி உயா்வு கொடுக்க மறுத்து வருகின்றனராம். எனவே, கூலி உயா்வு வழங்க வலியுறுத்தி, சுமைப்பணி தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் வரும் 31-ஆம் தேதிக்குள் ஒப்பந்தம் விடுவது எனவும், பிப்.1-ஆம் தேதி கூலி உயா்வு தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது. சிஐடியூ மாவட்டச் செயலா் பி.கருப்பையன், மாவட்ட இணைச் செயலா் வி.சுப்புராயன், டாஸ்மாக் சுமைப்பணி சங்க தலைவா் என்.முருகன், செயலா் எம்.தண்டபாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.