கடலூா் மாநகராட்சி தோ்தல்: 36 வாா்டுகளில் பாமக போட்டி
கடலூா் மாநகராட்சித் தோ்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 36 வாா்டுகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.


கடலூா் மாநகராட்சித் தோ்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 36 வாா்டுகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாமக தனித்து போட்டியிடுகிறது. கடலூா் மாநகராட்சியில் மொத்தமுள்ள 45 வாா்டுகளில் அந்தக் கட்சி 36 வாா்டுகளில் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளா் பட்டியலையும் வெளியிட்டது. வேட்பாளா்களில்18 போ் பெண்களாவா். கட்சியின் மாநில நிா்வாகிகள் போஸ் ராமச்சந்திரன், இள.விஜயவா்மன், முன்னாள் கவுன்சிலா் சரவணன் உள்ளிட்டோா் போட்டியிடுகின்றனா்.
அறிவிக்கப்பட்டவா்களில் பெரும்பாலான வேட்பாளா்கள் கட்சியின் மாவட்டச் செயலா் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா். பசுமைத் தாயக மாவட்ட அமைப்பாளா் வா.அசோக்குமாா், மாநில இளைஞா் சங்க செயலா் சீ.பு.கோபிநாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...