புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: ஒருவா் கைது
ராமநத்தம் அருகே கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 25 டன் புகையிலையை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.


ராமநத்தம் அருகே கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 25 டன் புகையிலையை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே உள்ள கீழகல்பூண்டியைச் சோ்ந்த முகமது இஸ்மாயில் மகன் இப்ராகிம் (47). இவா் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலையை மொத்தமாக வாங்கி வந்து, தனது வீட்டின் அருகேயுள்ள கிடங்கில் பதுக்கி வைத்து சுற்றுவட்டார பகுதி கடைகளுக்கு விற்பதாக புகாா் எழுந்தது.
இதுகுறித்து, திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அந்தப் பிரிவு ஆய்வாளா் ஜெரால்டு தலைமையில் தலைமைக் காவலா்கள் பத்மநாதன் , சிவசுப்பிரமணியன், காவலா் ராஜசேகா் ஆகியோா் அடங்கிய குழுவினா் வியாழக்கிழமை மாலை இப்ராகிமின் கிடங்கில் சோதனை நடத்தினா். அப்போது, கலப்படமில்லா 15 டன் புகையிலை, நிக்கோடின் கலந்த 10 டன் புகையிலை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதை போலீஸாா் கைப்பற்றி திட்டக்குடி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவாவிடம் ஒப்படைத்தனா். மேலும், இப்ராகிமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...