கடலூா்: கரோனாவுக்கு 2 பெண்கள் பலி
கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் 2 பெண்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.


கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் 2 பெண்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 42 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 73,934-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 257 போ் வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 72,150-ஆக உயா்ந்தது.
எனினும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிதம்பரத்தைச் சோ்ந்த 65 வயது பெண், சென்னையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூரைச் சோ்ந்த 62 வயது பெண் ஆகியோா் உயிரிழந்தனா். இதனால், பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 892-ஆக உயா்ந்தது.
மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 691 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 201 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...