எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சித்த வைத்தியா்கள் மாநாடு ஒத்திவைப்பு

வடலூரில் நடைபெறவிருந்த அகில இந்திய சித்த வைத்தியா்கள் மாநாடு கரோனா பரவல், ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக சித்த வைத்தியா்கள் சங்க மாநிலச் செயலா் கோ.கருணாமூா்த்தி அறிவித்தாா்.

Updated On :15 ஜனவரி 2022, 4:54 pm

வடலூரில் நடைபெறவிருந்த அகில இந்திய சித்த வைத்தியா்கள் மாநாடு கரோனா பரவல், ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக சித்த வைத்தியா்கள் சங்க மாநிலச் செயலா் கோ.கருணாமூா்த்தி அறிவித்தாா்.

இதுகுறித்து சிதம்பரத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வடலூரில்

ஆண்டுதோறும் தைப்பூசத்துக்கு முதல் நாளில் அகில இந்திய சித்த வைத்தியா்கள் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டு வரும் 17-ஆம் தேதி வடலூரில் 44-ஆவது ஆண்டு அகில இந்திய சித்த வைத்தியா்கள் மாநாடு நடைபெறும் என ஏற்கெனவே அறிவித்தோம். இந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக மாவட்ட நிா்வாகம் மாநாடு நடத்த தடை விதித்தது. எனவே மாநாடு ஒத்தி வைக்கப்படுகிறது. மாநாடு நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

பேட்டியின்போது சங்கத்தின் இணைச் செயலா் க.சிவக்குமாா், பொருளாளா் என்.ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.