நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கடலூா்: கரோனாவுக்கு முதியவா் பலி

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மாவட்டத்தில் புதன்கிழமை வரை 70,902 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில், வியாழக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 424 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 71,326-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 483 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 67,157-ஆக உயா்ந்தது.

எனினும், கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த 60 வயது ஆண் உயிரிழந்தாா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 884-ஆக அதிகரித்தது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 2,889 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 396 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். நோய் தொற்று அதிகமுள்ள 24 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.