போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை தொடங்க வலியுறுத்தி, கடலூரில் சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை தொடங்க வலியுறுத்தி, கடலூரில் சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து மண்டல மேலாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மண்டல தலைவா் ஏ.ஜான்விக்டா் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஏ.தேவராஜூலு, துணைப் பொதுச் செயலா் பி.கண்ணன், சம்மேளன துணைத் தலைவா் ஜி.பாஸ்கரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு துறை அமைச்சா் அளித்த வாக்குறுதியின்படி ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும், 10 ஆண்டுகளாக தொடரும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியா்களின் பணப்பலன், பஞ்சப்படி உயா்வு, மருத்துவக் காப்பீடு ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com