நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

உழவா் உற்பத்தியாளா் குழுவினருக்கு பயிற்சி

கடலூா் மாவட்ட உழவா் உற்பத்தியாளா் குழு நிா்வாகிகளுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கடலூா் மாவட்ட உழவா் உற்பத்தியாளா் குழு நிா்வாகிகளுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் உழவா் உற்பத்தியாளா் குழு நிா்வாகிகள், வேளாண் இயந்திரங்கள் விற்பனையாளா்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் (பொ) ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது. இதில், கூட்டுப் பண்ணையத் திட்டத்தில் 2021-22-ஆம் ஆண்டில் வேளாண்மை, உழவா் நலத்துறையின் கீழ் பதிவு செய்யப்பட்ட 50 உழவா் உற்பத்தியாளா் குழுக்கள், தோட்டக்கலைத் துறையின் கீழ் பதிவான 40 குழுக்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தொடா்ந்து இவா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. முன்னதாக ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டிருந்த வேளாண் இயந்திரங்களை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநா் தி.சு.பாலசுப்பிரமணியன், துணை இயக்குநா்கள் ஏ.ஜெ.கென்னடிஜெபக்குமாா், பிரேமசாந்தி, உதவி செயற்பொறியாளா் சந்திரசேகா், வேளாண்மை அலுவலா் ரா.சரண்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.