கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரத்தில் வீட்டு பூட்டை உடைத்து 30 சவரன் நகைகள் திருட்டு

சிதம்பரம் அருகே பள்ளிப்படை வெற்றி நகரில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 30 சவரன் நகைகளை திருடிச் சென்றனர்.

News image

30 சவரன் நகைகள் திருட்டப்பட்ட பீரோ.

Updated On :12 ஜூலை 2022, 5:42 am

DIN

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பள்ளிப்படை வெற்றி நகரில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 30 சவரன் நகைகளை திருடிச் சென்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பள்ளிப்படை வெற்றி நகரைச் சேர்ந்த அப்சல்மஜீத் மகன் ஜாபர் அலி (56). சிங்கப்பூரில் வசிக்கும் இவர், தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார். 

தனது வீட்டில் இணையதள சேவை இல்லாத காரணத்தால் மகள் ரசிகாவின் வீட்டிலிருந்தே வேலை செய்யும் வேண்டும் என்பதால் சிதம்பரம் வடக்குவீதியில் உள்ள நண்பர் வீட்டில் தனது மனைவி, மகளுடன் திங்கள்கிழமை மாலை வீட்டை பூட்டிக்கொண்டு வந்துள்ளார். 

Story image

இரவு வேலை முடிந்த பிறகு நள்ளிரவு 02.15 மணிக்கு வீட்டிற்கு சென்று பார்த்தபோது முன்பக்க கதவின்  பூட்டை உடைந்து  பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. 

இதுகுறித்து ஜாபர் அலி சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் டிஎஸ்பி எஸ்.ரமேஷ்ராஜ், ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். 

மேலும் கடலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரின் பேரில் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.