சிதம்பரம்: சிதம்பரம் அருகே பள்ளிப்படை வெற்றி நகரில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 30 சவரன் நகைகளை திருடிச் சென்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பள்ளிப்படை வெற்றி நகரைச் சேர்ந்த அப்சல்மஜீத் மகன் ஜாபர் அலி (56). சிங்கப்பூரில் வசிக்கும் இவர், தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
தனது வீட்டில் இணையதள சேவை இல்லாத காரணத்தால் மகள் ரசிகாவின் வீட்டிலிருந்தே வேலை செய்யும் வேண்டும் என்பதால் சிதம்பரம் வடக்குவீதியில் உள்ள நண்பர் வீட்டில் தனது மனைவி, மகளுடன் திங்கள்கிழமை மாலை வீட்டை பூட்டிக்கொண்டு வந்துள்ளார்.

இரவு வேலை முடிந்த பிறகு நள்ளிரவு 02.15 மணிக்கு வீட்டிற்கு சென்று பார்த்தபோது முன்பக்க கதவின் பூட்டை உடைந்து பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஜாபர் அலி சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் டிஎஸ்பி எஸ்.ரமேஷ்ராஜ், ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க: காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினருக்கான இடைத் தேர்தலில் திமுக வெற்றி
மேலும் கடலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரின் பேரில் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரும்பு நிலுவைத்தொகை ரூ.40 கோடியை பெற்றுத்தர நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்

சவுடு மணல் ஏற்றிச் சென்ற லாரிகள் சிறைப்பிடிப்பு

திருவள்ளூரில் கட்டுமான நலவாரிய பதிவுகளை மேற்கொள்ள புதிதாக ‘உழைப்பாளா் நலக்கூடம்’

செய்யாற்றில் கற்கால கருவிகள், பொருள்கள் கண்டெடுப்பு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



