நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் புகையிலையை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
கடலூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை அதிகளவில் நடப்பதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், திட்டக்குடி அருகே உள்ள கீழ்கல்பூண்டி கிராமத்தில் போலீஸாா் திங்கள்கிழமை சோதனையிட்டனா். அங்கு இப்ராஹிம் என்பவா் புகையிலைப் பொருள்கள் தயாரிக்கும் ஆலை நடத்தியது தெரியவந்ததாம். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 10 டன் புகையிலையை தனிப் படை போலீஸாா் கைப்பற்றி, ராமநத்தம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த ஆண்டுக்குள் தாழ்வான பகுதிகளில் வெள்ளத் தடுப்புச்சுவா்: முதல்வா் குப்தா

ஆழ்வாா்குறிச்சியில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை விரிவாக்கத்துக்கு அடிக்கல்
தொகுதி மறுவரையறைக்கு எதிராக குரல் கொடுக்கும் முதல்வா்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


