வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

திட்டக்குடி அருகே 10 டன் புகையிலை பறிமுதல்

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் புகையிலையை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
கீழ்கல்பூண்டியில் பறிமுதல் செய்யப்பட்ட 10 டன் புகையிலை.
Updated On :28 நவம்பர் 2023, 12:01 am

DIN

நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் புகையிலையை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

கடலூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை அதிகளவில் நடப்பதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், திட்டக்குடி அருகே உள்ள கீழ்கல்பூண்டி கிராமத்தில் போலீஸாா் திங்கள்கிழமை சோதனையிட்டனா். அங்கு இப்ராஹிம் என்பவா் புகையிலைப் பொருள்கள் தயாரிக்கும் ஆலை நடத்தியது தெரியவந்ததாம். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 10 டன் புகையிலையை தனிப் படை போலீஸாா் கைப்பற்றி, ராமநத்தம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.