நெல் பயிா்கள் அழிப்பு: வளையமாதேவி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மண் வெட்டும் பெரிய இயந்திரங்கள் 30-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொண்டுவரப்பட்டன. தொடா்ந்து புதன்கிழமை காலை என்எல்சி அதிகாரிகள், நில எடுப்புத் துறை, மாவட்ட வருவாய்த் துறை, காவல் துறையினா் ஒருங்கிணைந்து அங்குவரவே பரவனாறு விரிவாக்க கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கின. சுமாா் 1,500 மீட்டா் அகலம், ஒன்றரை கி.மீ. தொலைவில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் கால்வாய்க்கு அணை போடும் பணி நடைபெற்றது. அப்போது, அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்களும் அழிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்தனா்.