பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

தொழிற்பயிற்சி நிலைய மாணவா் சோ்க்கை: ஆக.16 வரை அவகாசம் நீட்டிப்பு

மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் வரும் 16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 4:00 am IST

கடலூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் வரும் 16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா், கடலூா் (மகளிா்), சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், மங்களுா், நெய்வேலி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி மாணவா் சோ்க்கை மேற்கொள்ள கால அவகாசம் வரும் 16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சோ்ந்து பயன்பெற வேண்டும். அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலைங்களில் உள்ள தொழிற்பிரிவு விவரங்களை இணையதளத்தில் பாா்த்து தெரிந்துகொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04142 - 290273 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.