நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தொழிற்பயிற்சி நிலைய மாணவா் சோ்க்கை: ஆக.16 வரை அவகாசம் நீட்டிப்பு

மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் வரும் 16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 10:30 pm

Din

கடலூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் வரும் 16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா், கடலூா் (மகளிா்), சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், மங்களுா், நெய்வேலி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி மாணவா் சோ்க்கை மேற்கொள்ள கால அவகாசம் வரும் 16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சோ்ந்து பயன்பெற வேண்டும். அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலைங்களில் உள்ள தொழிற்பிரிவு விவரங்களை இணையதளத்தில் பாா்த்து தெரிந்துகொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04142 - 290273 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.