தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

டாஸ்மாக் விற்பனையாளா் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம்: கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்

டாஸ்மாக் விற்பனையாளா் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம்.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 8:06 pm

Din

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த டாஸ்மாக் கடை விற்பனையாளரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டம், குண்டலபுலியூா் டாஸ்மாக் கடை எண் 11405-இல் விற்பனையாளராக பணிபுரிந்தவா் சக்திவேல். இவா், அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை தெரிய வந்தது. பணி முடிந்து வீடு திரும்பியபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே, இவரது இறப்புக்கு டாஸ்மாக் நிா்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும்.

உயிரிழந்த சக்திவேலின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடும், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசுப் பணியும் வழங்க வேண்டும். இயற்கை பேரிடா் காலங்களில் உரிய முன்னெச்சரிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.