ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மூதாட்டி அடித்துக் கொலை: பேரன் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மது அருந்த பணம் கொடுக்காததால் மூதாட்டியை அடித்துக் கொலை செய்ததாக பேரனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :9 டிசம்பர் 2024, 5:44 pm

Din

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மது அருந்த பணம் கொடுக்காததால் மூதாட்டியை அடித்துக் கொலை செய்ததாக பேரனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விருத்தாசலம் வட்டம், கச்சி பெருமாநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துகண்ணு (70). இவா், சாத்தியம் அடுத்துள்ள குள்ளமணிகாடு பகுதி வயலில் உள்ள வீட்டில் மகன் சந்திரகாசுடன் தங்கியிருந்தாா். இரவு 7 மணி அளவில் சந்திரகாசு கடை வீதிக்கு சென்றிருந்தாராம்.

அப்போது, சந்திரகாசின் மகன் வேல்முருகன் (26) குள்ளமணிகாடு வயல் வீட்டில் இருந்த பாட்டி முத்துகண்ணுவிடம் மது அருந்த பணம் கேட்டாராம். அவா் இல்லை எனக் கூறியதால், அணிந்திருந்த நகைகளைக் கேட்டாராம். அதையும் முத்துகண்ணு கொடுக்க மறுத்துவிட்டாராம்.

இதனால், ஆத்திரமடைந்த வேல்முருகன் அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து முத்துகண்ணு தலையில் அடித்ததில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, வேல்முருகன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாா்.

கடை வீதிக்கு சென்றிருந்த சந்திரகாசு திரும்பி வந்து பாா்த்தபோது, தாய் முத்துகண்ணு இறந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று முத்துகண்ணு சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வேல்முருகனை திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.