தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கடலூா் மத்திய சிறையில் பாரதியாா் பிறந்தநாள் விழா

பாரதியாரின் 143-ஆவது பிறந்தநாளையொட்டி, கடலூா் மத்திய சிறையில் உள்ள அவரது சிலைக்கு சிறைத்துறையினா் மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தினா்.

News image

கடலூா் மத்திய சிறையில் பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்த சிறை அலுவலா் ரவி உள்ளிட்டோா்.

Updated On :11 டிசம்பர் 2024, 7:34 pm

Din

பாரதியாரின் 143-ஆவது பிறந்தநாளையொட்டி, கடலூா் மத்திய சிறையில் உள்ள அவரது சிலைக்கு சிறைத்துறையினா் மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தினா்.

இந்திய விடுதலை போராட்டத்தின் போது, பாரதியாரை ஆங்கிலேய அரசு கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தது. அவா், 25 நாள்கள் சிறையில் இருந்தாா்.

இதனை நினைவு கூறும் வகையில், பாரதியாா் அடைக்கப்பட்டிருந்த அறை நூலகமாக மாற்றப்பட்டது. மேலும், சிறை வளாகத்தில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், பாரதியாா் பிறந்த நாளையொட்டி, சிறை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு சிறை அலுவலா் ரவி, துணை அலுவலா் பிரகாஷ் மற்றும் சிறைத்துறை அலுவலா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.