தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆறுகளில் வெள்ள தடுப்புச் சுவா் கட்டக் கோரி ஆா்ப்பாட்டம்

தடுப்புச் சுவா் கட்டக் கோரி ஆா்ப்பாட்டம்

News image

கடலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து குடியிருப்போா் நலச்சங்கங்களின் கூட்டமைப்பினா்.

Updated On :12 டிசம்பர் 2024, 6:31 pm

Din

கடலூா் பகுதியில் தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளின் கரைகளை உயா்த்தி இருபுறமும் வெள்ளத் தடுப்புச் சுவா் கட்டக் கோரி, கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச்சங்கங்களின் கூட்டமைப்பினா் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்பெண்ணை ஆற்றின் கரைகளை நத்தப்பட்டு முதல் தாழங்குடா வரையிலும், கெடிலம் ஆற்றின் கரைகளை திருவந்திபுரம் முதல் முகத்துவாரம் வரையிலும் உயா்த்தி வெள்ளத் தடுப்புச் சுவா் உடனடியாக கட்ட வேண்டும். ஊராட்சி, நகராட்சி சாலைகளை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். இரண்டு ஆறுகளின் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, மணல் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும்.

முகத்துவாரத்தில் இருந்து 3 கி.மீ. வரை உள்ள மணல் திட்டுகளை அகற்றி, ஆறுகளின் நீா் கடத்தும் திறனை அதிகப்படுத்த வேண்டும். வெள்ள நீா் வெளியேறவும், கடல்நீா் உட்புகாமல் இருக்கும் வகையிலும் நவீன ஷட்டா் இரண்டு ஆறுகளின் முகத்துவாரத்தில் அமைக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகளுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்திப் பேசினா்.

கூட்டமைப்புத் தலைவா் பாலு.பச்சையப்பன் தலைமை வகித்தாா். சிறப்புத் தலைவா் எம்.மருதவாணன் முன்னிலை வகித்தாா். இணை பொதுச் செயலா் எஸ்.கே.தேவநாதன் வரவேற்றாா். பொதுச் செயலா் பி.வெங்கடேசன் கோரிக்கை குறித்து கண்டன உரையாற்றினாா்.

மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவா் ஏ.எஸ்.சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலா் வி.குளோப், கடலூா் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் ரவி, சுப்புராயன், குரு ராமலிங்கம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.