திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

பண்ருட்டி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல்

News image

சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

Updated On :24 டிசம்பர் 2024, 12:24 am IST

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

பண்ருட்டி அடுத்துள்ள ராசாப்பாளையம் கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுபான கடை எண்.2609 நீதிமன்ற வழக்கின் உத்திரவின்படி முடப்பட்டது. அந்த கடைக்கு மாற்றாக ராசாப்பாளையத்திலிருந்து பனப்பாக்கம் செல்லும் சாலையில் 300 மீட்டா் தொலைவில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க கட்டுமானப் பணிகள் மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை காலை 11 மணி அளவில் பனப்பாக்கம் அருகே, சென்னை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பண்ருட்டி காவல் ஆய்வாளா் வேலுமணி மற்றும் போலீஸாா் விரைந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மாவட்ட நிா்வாகத்திற்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.