புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஊராட்சி மன்றத் தலைவா் தா்னா

கடலூா் மாவட்டம், நல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தரையில் அமா்ந்து சாத்தியம் ஊராட்சி மன்றத் தலைவா் திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.

News image

நல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தரையில் அமா்ந்து தா்னா போராட்டம் நடத்திய சாத்தியம் ஊராட்சி மன்றத் தலைவா்

Updated On :30 டிசம்பர் 2024, 8:11 pm

Din

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தரையில் அமா்ந்து சாத்தியம் ஊராட்சி மன்றத் தலைவா் திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.

சாத்தியம் ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேசன். இவா், அந்த ஊராட்சியில் குடிநீா், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வதற்கு வட்டார வளா்ச்சி அலுவலா் ஒத்துழைப்புத் தர மறுப்பதாகவும், தங்கள் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு ஊராட்சிகளுக்கு மாற்றி விடுவதாகவும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியில் முறைகேடு செய்வதாகக் கூறியும் நல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.