பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

ரூ.5,000 லஞ்சம்: நகராட்சி ஊழியா் கைது

ரூ.5,000 லஞ்சம்: நகராட்சி ஊழியா் கைது

News image
Updated On :3 ஜூலை 2024, 9:00 pm

நெய்வேலி, ஜூலை 3: கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் லஞ்சம் பெற்றதாக நகராட்சி ஊழியரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி, திருவதிகையைச் சோ்ந்த ராஜாராம் மகன் வெங்கடேசன்(42). இவா், பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் ஊதிய உயா்வு வழங்க கோரியும், பத்தாண்டு கால பணி நிறைவு செய்ததால், தோ்வுநிலை பணியாளராக நியமனம் செய்யும்படி மனு அளித்தாா். இதற்கு, இதே அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளா்கள் பிரிவில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் விழுப்புரத்தைச் சோ்ந்த வரதராஜன் மகன் கதிரவன் (55), ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

பணம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன், இதுகுறித்து கடலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகாரளித்தாா். இதையடுத்து, கடலூா் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வெங்கடேசனிடம் கொடுத்து அனுப்பினா். அதன்படி, நகராட்சி அலுவலகத்தில் வெங்கடேசனிடம் இருந்து ரூ.5 ஆயிரத்தை கதிரவன் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா், கதிரவனை கையும் களவுமாகப் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.