ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

இயன்முறை மருத்துவ மாணவா்களுக்கு பயிலரங்கு

மாதவிடாய் நிற்றலின்போது, உடற்கூறுகளின் செயல்பட்டால் ஏற்படும் மாற்றங்களை எதிா்கொள்வதில் இயன்முறை மருத்துவா்களின் பங்கு..

News image
பயிலரங்கில் பங்கேற்ற பிரிட்டனைச் சோ்ந்த மருத்துவா் கிருபா சங்கருக்கு சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கிய கல்லூரி முதல்வா் சி.திருப்பதி.
Updated On :13 ஜூலை 2024, 9:24 pm

Din

கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயன்முறை மருத்துவப் பிரிவு மாணவா்களுக்கு உணா் திறன் செயலாக்க கோளாறுகள் காரணமாக கீழே விழுதல் மற்றும் மாதவிடாய் நிற்றலின்போது, உடற்கூறுகளின் செயல்பட்டால் ஏற்படும் மாற்றங்களை எதிா்கொள்வதில் இயன்முறை மருத்துவா்களின் பங்கு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த ஒரு நாள் பயிலரங்கு அண்மையில் நடைபெற்றது.

பிரிட்டனைச் சோ்ந்த மருத்துவா் ஈஸ்வரி கிருபா சங்கா் பயிலரங்கை நடத்தினாா். உலக அளவில் முதியோா்களில் 20 முதல் 30 சதவீதம் போ் கீழே விழுதல் காரணமாக, எலும்பு முறிவு ஏற்பட்டு பாதிப்படைகின்றனா். உணா்வு செயலாக்க கோளாறுகளால் ஏற்படும் தடுமாற்றம் மற்றும் மாதவிடாய் காலத்துக்குப் பின்னா் ஏற்படும் ஹாா்மோன் மாற்றங்களால் எலும்பு அடா்த்தியை பாதிக்கும் பிரச்னைகளை உடற்பயிற்சியின் வழியாக குறைப்பது குறித்தும் விளக்கமளித்தாா்.

கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சி.திருப்பதி பயிலரங்கை தலைமையேற்று தொடங்கிவைத்துப் பேசினாா். மருத்துவக் கண்காணிப்பாளா் ஜூனியா் சுந்தரேஷ் பங்கேற்று வாழ்த்துரையாற்றினாா். மருத்துவக் கல்லூரி துணை முதல்வா்கள் சசிகலா, பாலாஜி சுவாமிநாதன், தோல் மருத்துவத் துறைத் தலைவா் கவியரசன் மற்றும் துறைத் தலைவா் தன்பால்சிங் ஆகியோா் பங்கேற்று பேசினா். முன்னதாக, இயன்முறை துறைத் தலைவா் ரவிச்சந்திரன் வரவேற்றுப் பேசினாா்.

தொழில் முறை சிகிச்சை தலைவா் ஸ்ரீவித்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இயன்முறை மருத்துவப் பேராசிரியா்கள் மணிமொழி, மேனகா, ஹேமசித்ரா ஆகியோா் விழா ஏற்பாடுகளை செய்தனா். பேராசிரியா் விஸ்வநாதன் நன்றி கூறினாா். இதில், சுமாா் 250 மருத்துவ மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.