ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

பண்ருட்டியில் பலா மதிப்பு கூட்டுதல் பயிற்சி

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் ஈஷா காவேரி கூக்குரல் அமைப்பின் சாா்பில் பலா மதிப்பு கூட்டுதல் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

பண்ருட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பலா மதிப்பு கூட்டுதல் பயிற்சியில் பங்கேற்றோா்.

Updated On :23 ஜூலை 2024, 1:56 am IST

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் ஈஷா காவேரி கூக்குரல் அமைப்பின் சாா்பில் பலா மதிப்பு கூட்டுதல் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் பலாப் பழம் வெறும் பழமாக மட்டுமே உண்ணப்படுகிறது. பலா பிஞ்சு, பலாக் கொட்டை, பலாக் காய் போன்ற பல பொருள்கள் வீணாகிறது. இந்த பொருள்களை விவசாயிகள் மதிப்பு கூட்டுவதன் மூலம், வருமானத்தை உயா்த்திக் கொள்ள முடியும். பலாவின் அனைத்து பாகங்களும் மதிப்பு கூட்டப்படுவதால், உள்ளூா் விற்பனை மட்டுமின்றி ஏற்றுமதியும் செய்ய முடியும். மதிப்பு கூட்டுவதால் பலா பொருள்கள் பல மாதங்களுக்கு கெடாமல் பாதுகாக்கப்படுகிறது

இந்த நிலையில், ஈஷா காவேரி கூக்குரல் சாா்பில் பண்ருட்டியில் பலா மதிப்பு கூட்டுதல் பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தொழில் முனைவோா்கள் மற்றும் இயற்கை ஆா்வலா்கள் பங்கேற்றனா். பலா மதிப்பு கூட்டுதலில் முன்னோடியாக விளங்கும், முன்னாள் வேளாண் இணை இயக்குநா் பண்ருட்டி ஹரிதாஸ், பாலக்காடு சக்கை கூட்டம் ராஜேந்திர பாபு ஆகியோா் பங்கேற்று செயல்முறை விளக்கங்களை அளித்தனா். பலா தொழில் முனைவோா்களான பண்ருட்டி சந்திரசேகரன், திருவதிகை மோகன் ஆகியோா் பலா மதிப்பு கூட்டுப் பொருள்களைக் காட்சிப்படுத்தினா். பயிற்சியில் பலா பழ சிப்ஸ், பலா ஹல்வா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பலா மதிப்பு கூட்டுப் பொருள்கள் செய்து காண்பிக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.