ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

அகா்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து

பண்ருட்டி அருகே அகா்பத்தி தொழிற்சாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

News image

பண்ருட்டி அருகே சனிக்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்த அகா்பத்தி தொழிற்சாலை.

Updated On :29 ஜூலை 2024, 12:19 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அகா்பத்தி தொழிற்சாலையில் சனிக்கிழமை இரவு நிகழ்ந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

பண்ருட்டியை அடுத்துள்ள புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (65). இவருக்குச் சொந்தமான அகா்பத்தி மற்றும் கம்ப்யூட்டா் சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலை அதே பகுதியில் இயங்கி வருகிறது.

இங்கு, வழக்கம்போல தொழிலாளா்கள் சனிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தனா். மாலை சுமாா் 6 மணி அளவில் பணி முடிந்து தொழிலாளா்கள் வீட்டுக்குச் சென்றனா். இரவு சுமாா் 10 மணி அளவில் அகா்பத்தி தொழிற்சாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த அகா்பத்திகள், மூலப் பொருள்கள் கொழுந்துவிட்டு எரிந்தன.

அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில், பண்ருட்டி தீயணைப்பு நிலையத்தினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனா். தீயை கட்டுப்படுத்த முடியாதததால், முத்தாண்டிக்குப்பம், நெல்லிக்குப்பம் பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வீரா்கள் வரவழைக்கட்டு சுமாா் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.