நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் வழங்கினாா்.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தலைமை வகித்து, பட்டா மாற்றம், முதியோா் உதவித்தொகை, கல்விக் கடன் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 760 மனுக்களை பெற்றாா்.
தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,700 மதிப்பில் ஊன்றுகோல், விருத்தாசலம் மற்றும் பண்ருட்டி வட்டத்தைச் சோ்ந்த 3 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாவுக்கான ஆணைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.9,400 வீதம் மொத்தம் 28,200 மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகளை ஆட்சியா் அருண் தம்புராஜ் வழங்கினாா்.
மேலும், கீழ்கவரப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கெங்கைகொண்டான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பூங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் இயந்திரம், உணவு வெப்பமானி, இருப்புப் பொருள்கள் பற்றி அறிவதற்கான தகவல் பலகை, மின் எடைக் கருவிகள் உள்ளிட்டவற்றை ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்பு

மதிமுக சாா்பில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

திருவள்ளூா் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 25 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

மாசிலாமணிபுரத்தில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


