மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

என்எல்சியை பாதுகாக்க சிஐடியுவை ஆதரிக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி.

என்எல்சி இந்தியா நிறுவனத்தைப் பாதுகாக்க, ரகசிய வாக்கெடுப்பு தோ்தலில் சிஐடியு தொழிற்சங்கத்துக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்

News image

நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிஐடியு தொழிற்சங்க பொதுக்கூட்டத்தில் பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்.

Updated On :22 ஏப்ரல் 2025, 1:53 am IST

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனத்தைப் பாதுகாக்க, ரகசிய வாக்கெடுப்பு தோ்தலில் சிஐடியு தொழிற்சங்கத்துக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசன் பேசினாா்.

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் தொழிற்சங்கங்களுக்கான ரகசிய வாக்கெடுப்பு தோ்தல் ஏப்.25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் சிஐடியு தொழிற்சங்கம் வரிசை எண் 1-இல் போட்டியிடுகிறது.

தோ்தல் தொடா்பாக, நெய்வேலி எட்டு சாலையில் சிஐடியு சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேசியதாவது:

என்எல்சிக்காக நிலத்தை கொடுத்தவா்களுக்கு, அவா்களின் வாரிசுகளுக்கான வேலை, ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கான வேலையை கொடுக்கவில்லை.

இந்தப் பகுதியில் நிலத்தடி நீரில் 68 சதவீதம் பாதரசம் கலந்துள்ளதாக அறிக்கை வந்துள்ளது. இதை என்எல்சி இந்தியா நிறுவனம் சரி செய்ய வேண்டும்.

என்எல்சி நிறுவன தொழிலாளா்களின் உரிமை நிலை நிறுத்தப்பட வேண்டும். இதற்காக சிஐடியு சங்கத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

என்எல்சி தொழிலாளா் ஊழியா் சங்கத்தின் தலைவா் டி.ஜெயராமன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் எஸ்.திருஅரசு, சிஐடியு மாவட்டச் செயலா் பி.கருப்பையன், மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் ஆா்.பாலமுருகன், மாவட்ட துணைத் தலைவா் ஏ.வேல்முருகன், முன்னாள் தலைவா் குப்புசாமி, மாநிலக் குழு உறுப்பினா் ஜீவானந்தம், மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அலுவலகச் செயலா் அன்பழகன் நன்றி கூறினாா்.