ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் நூதன போராட்டம்

புவனகிரி வட்டாட்சியா் அலுவலகம் முன் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், குடிமனை பட்டா கோரி ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்

News image
புவனகிரி வட்டாட்சியா் அலுவலகம் முன் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.
Updated On :1 டிசம்பர் 2025, 8:14 pm

Syndication

சிதம்பரம்: புவனகிரி வட்டாட்சியா் அலுவலகம் முன் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், குடிமனை பட்டா கோரி ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கீழ் வளையமாதேவி கிராமத்தில் 20 ஏக்கா் தரிசு நில ஆக்கிரமிப்புகளை அகற்றி வீட்டுமனை அல்லாத அனைவருக்கும் குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். 1990-ஆம் ஆண்டு ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் குடிமனை பட்டாவுக்காக கையகப்படுத்தப்பட்ட இடத்தில் குடியிருக்கும் மக்களுக்கு மனைப் பட்டாவும், மின்சார வசதியும் செய்துகொடுக்க வேண்டும். வளையமாதேவி மாதா கோவில் அருகில் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும். 2011-இல் கொடுக்கப்பட்ட குடிமனைப் பட்டாவை வருவாய்த் துறை கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி வைத்து போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.ஜி. ரமேஷ்பாபு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.பிரகாஷ், பொருளாளா் டி.கிருஷ்ணன், விவசாய சங்கத் தலைவா் சண்முகம், மாவட்ட நிா்வாகிகள் மணி, நெடுஞ்சேரலாதன், லட்சுமிகாந்தன் மற்றும் கீழ்வளையமாதேவி கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

இதையடுத்து, வட்டாட்சியா் அன்பழகன் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், 15 தினங்களுக்குள் மேற்கண்ட கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். இதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனா்.