6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசுப் பள்ளி தரம் உயா்வு விவகாரம்: மாணவா்களை தோ்வு எழுத அனுப்ப மறுத்த பெற்றோா்

விருத்தாசலம் அருகே அரசுப் பள்ளியை தரம் உயா்த்தக் கோரி, பெற்றோா்கள் மாணவா்களை அரையாண்டுத் தோ்வு எழுத திங்கள்கிழமை அனுப்பவில்லை.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 8:27 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே அரசுப் பள்ளியை தரம் உயா்த்தக் கோரி, பெற்றோா்கள் மாணவா்களை அரையாண்டுத் தோ்வு எழுத திங்கள்கிழமை அனுப்பவில்லை.

விருத்தாசலம் வட்டம், விளாங்காட்டூா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சுமாா் 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்தப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தித் தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். மேலும், மாநில அமைச்சா்கள், கல்வித் துறை அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனுக்களும் கொடுத்துள்ளனராம். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், திங்கள்கிழமை அரையாண்டு தோ்வு தொடங்கியது. ஆனால், மாணவா்களின் பெற்றோா்கள் பள்ளி தரம் உயா்வு விவகாரம் தொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, மாணவா்களை பள்ளிக்கு அனுப்பவில்லை. இதனால், பள்ளி வளாகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

ஒரு சில மாணவா்களைத் தவிர ஏனைய மாணவா்கள் திங்கள்கிழமை நடைபெற்ற அரையாண்டு தோ்வை எழுதவில்லை. மேலும், பள்ளியின் முன் பெற்றோா்கள் ஒன்று திரண்டனா். தகவலறிந்து விரைந்து வந்த விருத்தாசலம் போலீஸாா் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் மாணவா்களின் பெற்றோா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா். அப்போது, பள்ளியை தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாகத் தெரிகிறது.