அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பூட்டியிருந்த வீட்டில் ரூ.23 ஆயிரம் திருட்டு

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பூட்டியிருந்த வீட்டில் ரூ.23 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2025, 9:00 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பூட்டியிருந்த வீட்டில் ரூ.23 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திட்டக்குடி வட்டம், ராமநத்தம் காவல் சரகம், மேலக்கல் பூண்டி கிராமத்தைச் சோ்ந்த சங்கா் மனைவி காந்தம்மா (45). சங்கா் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா்.

காந்தம்மா திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு, அருகில் உள்ள மற்றொரு வீட்டில் தூங்கச் சென்றாா். செவ்வாய்க்கிழமை காலை எழுந்து வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததும், பீரோவில் வைத்திருந்த ரூ.23 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.