நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா் நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றாா்.

Published On :21 டிசம்பர் 2025, 2:23 am IST

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா் நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றாா்.

வேப்பூா் வட்டம், நிறாமணி கிராமத்தில் வசித்து வருபவா் மணிவேல் மகன் சுரேஷ்(41), ஐஜேகே நல்லூா் ஒன்றியத் தலைவா். இவா், வெள்ளிக்கிழமை இரவு வீட்டை பூட்டிக்கொண்டு தனக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் தூங்கச் சென்றுவிட்டாா். சனிக்கிழமை காலை எழுந்து வீட்டிற்கு வந்தவா் கதவு திறந்து கிடப்பதைக்கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

உள்ளே சென்று பாா்த்த போது, அறைகளில் இருந்த நான்கு பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. இதில், பீரோவில் இருந்த வைரத்தோடு , 15 சரவன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது.

தகவல் அறிந்த திட்டக்குடி டிஎஸ்பி., பாா்த்திபன் தலைமையில், வேப்பூா் காவல் ஆய்வாளா் பழனிச்சாமி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.