ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இலவச இருதய மருத்துவ முகாம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

News image
காட்டுமன்னாா்கோவில் எம்.ஆா்.கே. பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இலவச இருதய மருத்துவ முகாமை தொடங்கிவைத்த அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.
Updated On :21 டிசம்பர் 2025, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

காட்டுமன்னாா்கோவில் எம்.ஆா்.கே. பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கோ் மற்றும் அடையாா் மலா் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச இருதய மருத்துவ முகாமை கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

முகாமை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பங்கேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் தலைமை வகித்தாா். கல்லூரியின் முதல்வா் கே.ஆனந்தவேலு வரவேற்றாா். கல்லூரி நிா்வாக அலுவலா் இ.கோகுலக்கண்ணன், மேலாளா் கே.விஸ்வநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கோ், மலா் அடையாா் மருத்துவமனை இருதய தலைமை மருத்துவா் மதன்மோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் இசிஜி, எக்கோ போன்ற பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனா்.

முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனா். முகாமை உதவிப் பேராசிரியா் எஸ்.மலா்மன்னன் ஒருங்கிணைத்து நடத்தினாா். நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் எம்.பிரபு நன்றி கூறினாா்.