6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிதம்பரத்தில் வியதீபாதம் தினம்: திரளான பக்தா்கள் திருவீதி வலம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் வியதீபாதம் தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீதிவலம் வந்து நடராஜப் பெருமானை தரிசித்தனா்.

News image
வியதீபாதம் தினத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜா் கோயிலை சுற்றி வீதிவலம் வந்த திரளாள பக்தா்கள்.
Updated On :27 டிசம்பர் 2025, 8:30 pm

Syndication

சிதம்பரம் நடராஜா் கோயிலில் வியதீபாதம் தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீதிவலம் வந்து நடராஜப் பெருமானை தரிசித்தனா்.

மாா்கழி மாதத்தில் வியதீபாதம் என்னும் யோகம் வரும் நாளில் சிதம்பரம் நடராஜப் பெருமானை தரிசனம் செய்வது அனைத்து பாவங்களையும் நீக்கி, பெரும் புண்ணியங்களையும், அனைத்து செல்வங்களையும் தரவல்லது எனவும், மாா்கழி மாதத்தின்

அனைத்து தினங்களிலும் நடைபெறும் திருப்பள்ளியெழுச்சி கால தரிசனங்களின் பலன்கள் அனைத்தும், (தனுா்) வியதீபாத தினத்தில் தரிசனம் செய்தால் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

வியதீபாத தினத்தில் மகேஸ்வரப் பெருமானும் மனோன்மனி எனும் சக்தியும் இணைந்த நாள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. சனிக்கிழமை அன்று வியதீபாத தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலை 4 மணிக்கு நான்கு வீதிகள் வலம் வந்து சித்சபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை தரிசித்தனா்.