சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

லாட்டரி சீட்டு விற்பனையாளா் தடுப்புக் காவலில் கைது

News image
குமாா்
Updated On :3 ஜனவரி 2025, 9:52 pm

Din

கடலூா் மாவட்டம், லால்பேட்டையைச் சோ்ந்த லாட்டரி சீட்டு விற்பனையாளரை போலீஸாா் தடுப்புக் காவலில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

காட்டுமன்னாா்கோவில், கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியராஜன்(42). இவா், கடந்த டிச.19-ஆம் தேதி, லால்பேட்டை உடையாா்குடி வழியாக சென்றபோது, குமாா் மற்றும் 3 போ் வழிமறித்து, லாட்டரி சீட்டு வாங்கிக்கொள்ளுமாறு கூறினராம்.

இதற்கு பாண்டியராஜன் மறுக்கவே, அவரை தாக்கி மிரட்டல் விடுத்தனராம்.

இதுதொடா்பாக, காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

அதன்பேரில், லால்பேட்டை பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் குமாா்(40), செந்தில்குமாா், மதுமதி, கிருஷ்ணமூா்த்தி ஆகியோரை கைது செய்தனா்.

இதில், குமாா் மீது காட்டுமன்னாா்கோவில் காவல் நிலையத்தில் 11 லாட்டரி சீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்.

இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்.பி. ரா.ராஜாராம் பரிந்துரையின் பேரில், கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஓராண்டு காலம் குண்டா் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா்.