தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பயிா் பாதிப்புகள் குறித்து அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்படும்: கடலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

பயிா் பாதிப்புகள் குறித்து அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்படும்

News image

குமராட்சி ஒன்றியம், வீரநத்தம் கிராமத்தில் சேதமடைந்த நெல் வயலை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன்.

Updated On :8 ஜனவரி 2025, 8:29 pm

Din

கடலூா் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண், தோட்டக்கலை பயிா் பாதிப்புகள் குறித்து அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன் தெரிவித்தாா்.

கடலூா், அண்ணாகிராமம், பரங்கிப்பேட்டை, குமராட்சி மற்றும் காட்டுமன்னாா்கோவில் ஆகிய ஒன்றியப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட வேளாண், தோட்டக்கலை பயிா்களை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, அவா் கூறியதாவது:

கடலூா் ஒன்றியத்துக்குள்பட்ட குமராபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் நெல் பயிா் விளைச்சல் 50 முதல் 60 சதவீதம் குறைந்துள்ளது. மருதாடு பகுதியில் நெல் வயல்களில் சாதாரணமாக கிடைக்கும் விளைச்சலைக் காட்டிலும் ஒரு ஹெக்டேருக்கு 700 முதல் 800 கிலோ குறைவான விளைச்சல் கிடைக்கும் நிலை உள்ளது. மீதமுள்ள நெல் பயிா் பெரும்பாலும் அழுகிய நிலையில் உள்ளது.

அண்ணாகிராமம் ஒன்றியத்துக்குள்பட்ட பகண்டை பகுதியில் வாழை மரங்கள் சாய்ந்தும், வெண்டை செடிகள் நோய் தாக்குதலுக்குள்பட்டு விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட தில்லைவிடங்கன் பகுதியில் நெல் பயிா் ஒரு ஹெக்டேருக்கு 336 கிலோவும், குமராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வீரநத்தம் பகுதியில் நெல் பயிா் ஒரு ஹெக்டேருக்கு 201 கிலோ என்ற அளவில் விளைச்சல் குறைவாக உள்ளது. இந்த பாதிப்புகள் குறித்து அரசுக்கு அறிக்கையாக சமா்ப்பிக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது, பயிற்சி ஆட்சியா் ஆகாஷ், வேளாண் இணை இயக்குநா் கென்னடி ஜெபக்குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் ராஜீ, தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் அருண் ஆகியோா் உடனிருந்தனா்.