திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

என்எல்சி கிரேன் மோதி ஊழியா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே வியாழக்கிழமை என்எல்சி இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான கிரேன், பைக் மீது மோதியதில் என்எல்சி ஊழியா் உயிரிழந்தாா்.

News image
தங்கதுரை
Updated On :9 ஜனவரி 2025, 7:36 pm

Din

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே வியாழக்கிழமை என்எல்சி இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான கிரேன், பைக் மீது மோதியதில் என்எல்சி ஊழியா் உயிரிழந்தாா்.

நெய்வேலியை அடுத்துள்ள தாண்டவன்குப்பம் பகுதியைச் சோ்ந்த தங்கமுத்து மகன் தங்கதுரை (48), என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாம் அனல் மின் நிலையத்தில் நிரந்தர ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவா், வியாழக்கிழமை காலை இரண்டாம் அனல் மின் நிலையத்துக்கு பணிக்கு சென்று, பிற்பகல் மந்தாரக்குப்பம் வழியாக பைக்கில் நெய்வேலிக்கு சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, வடக்கு வெள்ளூா் ஈஸ்வரன் கோயில் அருகே என்எல்சி இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான கிரேன் வாகனம், சாலையோரம் சென்ற தங்கதுரை பைக் மீது மோதியது. இந்த விபத்தில் தங்கதுரை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், கிரேன் வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து குறித்து தகவலறிந்து வந்த தங்கதுரை உறவினா்கள், குடும்பத்தில் ஒருவருக்கு என்எல்சி நிறுவனத்தில் நிரந்தர வேலை வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

 விபத்து ஏற்படுத்தி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த என்எல்சி இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான கிரேன்.

விபத்து ஏற்படுத்தி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த என்எல்சி இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான கிரேன்.

நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா தலைமையிலான போலீஸாா் தங்கதுரை குடும்பத்தினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா். இந்த சம்பவம் குறித்து மந்தாரக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.