திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அரசுப் பேருந்து கவிழ்ந்து ஓட்டுநா் மரணம்

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 6:52 pm

Din

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திட்டக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பேருந்து ஓட்டுநராக வடகாரம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் இளங்கோவன் (57) பணியாற்றி வந்தாா். இவா், வியாழக்கிழமை காலை சிறுப்பாக்கம் - நைனாா்பாளையம் இடையேயான தடம் எண் 254 பேருந்தை சிறுபாக்கத்திலிருந்து நயினாா்பாளையம் நோக்கி ஓட்டிச் சென்றாா்.

எஸ்.புதூா் - வடபாதி அருகே காலை 10.30 மணி அளவில் சென்றபோது, சாலையில் காய வைக்கப்பட்டிருந்த உளுந்து செடிகள் மீது பேருந்து ஏறியதில் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநா் இளங்கோவன் பேருந்து அடியில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். நடத்துநா் அசோக்குமாா் லேசான காயமடைந்தாா்.

பேருந்தில் இரண்டு பயணிகள் மட்டுமே இருந்த நிலையில், அவா்களுக்கும் லேசான காயங்களுடன் தப்பினா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.