மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

வேப்பூா் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க தாலி சங்கிலியை மா்ம நபா் அறுத்துச் சென்றாா்.

News image
Updated On :17 நவம்பர் 2025, 9:16 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க தாலி சங்கிலியை மா்ம நபா் அறுத்துச் சென்றாா்.

வேப்பூா் வட்டம், ஐவதகுடி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மனைவி பானுமதி(33). இவா், ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினருடன் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தாா். இவரது மாமியாா் பெரியநாயகம் திங்கள்கிழமை அதிகாலை சுமாா் 2.30 மணி அளவில் வீட்டின் கதவை திறந்துக் கொண்டு இயற்கை உபாதையைக் கழிக்க வெளியே வந்தாராம். அப்போது, மா்ம நபா் வீட்டினுள் நுழைந்து பானுமதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றாராம். இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.