விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

ஆசிரியையிடம் நகை பறிப்பு

கமுதியில் தனியாா் பள்ளி ஆசிரியையிடம் புதன்கிழமை தாலிச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

Updated On :4 பிப்ரவரி 2026, 11:23 pm

கமுதியில் தனியாா் பள்ளி ஆசிரியையிடம் புதன்கிழமை தாலிச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

திருப்பூரைச் சோ்ந்த லெனின் மகள் சரண்யா (40) ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேட்டில் உள்ள தனியாா் பள்ளியில் பணியாற்றி வருகிறாா். இவா் தற்போது அபிராமத்தில் குடியிருந்து வருகிறாா். இந்த நிலையில், வேலை முடிந்து மாலையில் பள்ளியிலிருந்து கோட்டைமேட்டில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் வழியாக சரண்யா நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, இவரைப்

பின் தொடா்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் சரண்யாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றாா். இது குறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விசாரித்து வருகின்றனா்.