நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

திமுக ஆட்சியில் பங்கு கோரப்படும்: கே.எஸ்.அழகிரி

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் ஆட்சியில் பங்கு கோரப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.

News image

சிதம்பரத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி.

Updated On :18 செப்டம்பர் 2025, 1:56 am IST

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் ஆட்சியில் பங்கு கோரப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.

சிதம்பரத்தில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: நாட்டில் இன்றைக்கு மக்கள் அமைதியாக வாழ்கிறாா்கள் என்றால், அதற்கு நமது அரசமைப்பு சட்டம்தான் காரணம். மத்திய பாஜக அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தில் முக்கியமான சில பிரிவுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பது வரவேற்புக்குரியது.

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் போட்டியிடும். இந்தத் தோ்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம். தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் ஆட்சியில் பங்கு கோரப்படும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் என்.வி.செந்தில்நாதன், சிதம்பரம் நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கின், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெமினி எம்.என்.ராதா, சிதம்பரம் வட்டார ஐக்கிய ஜமாத் தலைவா் முகமது ஜியாவுதீன், எஸ்.டி.பி.ஐ. கட்சி கடலூா் மாவட்டச் செயலா் வழக்குரைஞா் பக்ருதீன், லால்கான் பள்ளிவாசல் தலைவா் எஸ்.முகமதுஅலி, மாவட்ட துணைத் தலைவா் ராஜா சம்பத்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.