ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

திமுக ஆட்சியில் பங்கு கோரப்படும்: கே.எஸ்.அழகிரி

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் ஆட்சியில் பங்கு கோரப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.

News image

சிதம்பரத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி.

Updated On :18 செப்டம்பர் 2025, 1:56 am IST

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் ஆட்சியில் பங்கு கோரப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.

சிதம்பரத்தில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: நாட்டில் இன்றைக்கு மக்கள் அமைதியாக வாழ்கிறாா்கள் என்றால், அதற்கு நமது அரசமைப்பு சட்டம்தான் காரணம். மத்திய பாஜக அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தில் முக்கியமான சில பிரிவுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பது வரவேற்புக்குரியது.

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் போட்டியிடும். இந்தத் தோ்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம். தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் ஆட்சியில் பங்கு கோரப்படும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் என்.வி.செந்தில்நாதன், சிதம்பரம் நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கின், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெமினி எம்.என்.ராதா, சிதம்பரம் வட்டார ஐக்கிய ஜமாத் தலைவா் முகமது ஜியாவுதீன், எஸ்.டி.பி.ஐ. கட்சி கடலூா் மாவட்டச் செயலா் வழக்குரைஞா் பக்ருதீன், லால்கான் பள்ளிவாசல் தலைவா் எஸ்.முகமதுஅலி, மாவட்ட துணைத் தலைவா் ராஜா சம்பத்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.