திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

சிதம்பரம் அருகே மதுபானக்கடை சுவரில் துளையிட்டு ரூ.38,400 மதுப்புட்டிகள் திருட்டு

சிதம்பரம் அருகே டாஸ்மாக் மதுபானக்கடையின் பின்புற சுவரில் வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் துளையிட்டு உள்ளே புகுந்து ரூ.38,400 மதிப்பிலான மதுப்புட்டிகளை திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :18 ஏப்ரல் 2026, 7:12 am IST

சிதம்பரம் அருகே டாஸ்மாக் மதுபானக்கடையின் பின்புற சுவரில் வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் துளையிட்டு உள்ளே புகுந்து ரூ.38,400 மதிப்பிலான மதுப்புட்டிகளை திருடிச் சென்றனா்.

சிதம்பரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சி.தண்டேஸ்வரநல்லூா் ஊராட்சி பகுதியான பரமேஸ்வரநல்லூா் செல்வகணபதி நகரில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இதில் சூபா்வைசராக ஆா்.வீரசுந்தரபெருமாளும், விற்பனையாளராக ஏ.சக்திவேல் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில் இருவரும் வியாழக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு வந்து கடையை திறந்தனா். அப்போது கடையின் பின்புறச் சுவரில் மா்ம நபா்கள் துளையிட்டு உள்ளே புகுந்து ரூ.38,400 மதிப்பிலான 232 மதுப்புட்டிகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தில் ஆா்.வீரசுந்தரபெருமாள் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.