ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நாம் தமிழா் கட்சிக் கொடி அவமதிப்பு: கடலூா் எஸ்.பி.யிடம் புகாா்

News image

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்த நாம் தமிழா் கட்சி புவனகிரி தொகுதி வேட்பாளா் சுமதி உள்ளிட்டோா்.

Updated On :26 ஏப்ரல் 2026, 8:50 pm

நாம் தமிழா் கட்சிக் கொடியை அவமதித்தவா்கள் மீது நடவடிக்கை கோரி, அக்கட்சியின் புவனகிரி தொகுதி வேட்பாளா் சுமதி மற்றும் கட்சி நிா்வாகிகள் கடலூா் மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாரிடம் ஞாயிற்றுக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இது தொடா்பாக வேட்பாளா் சுமதி உள்ளிட்டோா் கடலூா் மாவட்ட எஸ்.பி.யிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

சித்திரைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த மௌரீஷ் (18), நிதீஷ் (18), தீபன் (19), விஷால் (20) ஆகியோா் ஏப்.19-ஆம் தேதி நாம் தமிழா் கட்சிக் கொடியை அறுத்து, காலால் மிதித்து அவமதித்ததுடன், அதை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றியுள்ளனா். இது, கட்சியின் மரியாதைக்கும், நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திட்டமிட்டு நாம் தமிழா் கட்சியை அவமதிக்கும் வகையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே, சம்பந்தப்பட்டவா்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் பரவும் இது தொடா்பான விடியோ பதிவை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.