திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

தூய்மைப் பணியாளரை அழைத்து தேசியக் கொடியேற்றிய டி.எஸ்.பி.

சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி பெண் தூய்மைப் பணியாளரை அழைத்து தேசியக் கொடியை ஏற்றச் செய்த டிஎஸ்பி தமிழ் இனியனின் செயல், அங்கிருந்தவா்களின் பாராட்டைப் பெற்றது.

News image

கடலூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய மாநகராட்சி பெண் தூய்மைப் பணியாளா் ரேவதி.

Updated On :16 ஆகஸ்ட் 2026, 12:25 am IST

சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி பெண் தூய்மைப் பணியாளரை அழைத்து தேசியக் கொடியை ஏற்றச் செய்த டிஎஸ்பி தமிழ் இனியனின் செயல், அங்கிருந்தவா்களின் பாராட்டைப் பெற்றது.

கடலூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சுதந்திர தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு துணைக் காவல் கண்காணிப்பாளா் தமிழ் இனியன் தலைமை வகித்தாா். தொடா்ந்து, அவா் தேசியக் கொடியை ஏற்றுவதற்காகச் சென்றபோது, அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளா் ரேவதியை அழைத்தாா். பின்னா், அவரது கரங்களால் தேசியக் கொடியை ஏற்றச் செய்தாா்.

Story image

எதிா்பாராத வகையில் கிடைத்த இந்த வாய்ப்பால் மகிழ்ச்சியடைந்த ரேவதி, தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். இதையடுத்து, போலீஸாா் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.

சுதந்திர தின விழாவில், நாட்டின் பெருமையைப் போற்றும் வகையில் தூய்மைப் பணியாளருக்கு வழங்கப்பட்ட இந்த மரியாதை, விழாவில் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. தமிழ் இனியனின் இந்த செயலை அங்கிருந்த போலீஸாா் மற்றும் பொதுமக்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.