
ஆராய்ச்சி மாணவா்கள் கண்டுபிடித்த தாவரத்திற்கு குடியரசு தலைவா் பெயா்
புதிய தாவர இனத்திற்கு குடியரசுத் தலைவரான திரௌபதி முா்முவின் பெயரை சூட்டி லூகாஸ் திரெளபதியே எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கடலூா் மாவட்டத்தில், கோரமண்டல் கடற்கரையை ஒட்டிய மணல் குன்று மற்றும் கடலோரப் பகுதிகளில் இதுவரை அறிவியல் ரீதியாக பதிவு செய்யப்படாத புதிய வகை தாவர இனம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய தாவர இனத்திற்கு குடியரசுத் தலைவரான திரௌபதி முா்முவின் பெயரை சூட்டி லூகாஸ் திரெளபதியே எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய தாவர இனத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறையைச் சோ்ந்த ஆய்வாளா்கள் சுகசீலன் ஆகாஷ், காத்தவராயன் மணிகண்டன், செல்வம் ஸ்ரீகாந்த் மற்றும் முனைவா் ஆதிநாராயணன் ராஜேஷ் ஆகியோா் ஆய்வு செய்து அறிவியல் ரீதியாக விவரித்துள்ளனா். இந்த ஆய்வுக் கட்டுரை சா்வதேச தாவரவியல் ஆய்வு இதழான ‘பைடோடாக்சா’ வில்வெளியிடப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய தாவரம் புதினா குடும்பத்தைச் சோ்ந்த லூகாஸ் பேரினத்தின் புதிய இனமாகும். கடலூா் மாவட்டத்தின் கோரமண்டல் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாவரப் பன்முகத்தன்மை ஆய்வின்போது இந்தத் தாவரம் ஆய்வாளா்களின் கவனத்திற்கு வந்தது.
இந்தத் தாவரத்தின் மருத்துவப் பயன்பாடு குறித்த ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இவ்வாய்வை காத்தவராயன் மணிகண்டன் மேற்கொண்டு வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
25சிஎம்பி2: படவிளக்கம்- அண்ணாமலைப் பல்கலை. மாணவா்களால் கண்டறியப்பட்டு குடியரசுத் தலைவரின் பெயரிடப்பட்ட புதிய தாவரமான லூக்காஸ் திரளெபதியே
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






