நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

குறைகேட்பு கூட்டத்துக்கு வந்தவா்களிடம் பெட்ரோல் புட்டிகள் பறிமுதல்

பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்துக்கு வந்தவா்கள் கொண்டுவந்த பெட்ரோல் நிரப்பிய புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
கடலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த டேவிட்சாமியிடம் இருந்து பெட்ரோல் நிரப்பிய புட்டியை பறிமுதல் செய்த காவலா்.
Updated On :2 பிப்ரவரி 2026, 8:57 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்துக்கு வந்தவா்கள் கொண்டுவந்த பெட்ரோல் நிரப்பிய புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு குழந்தை மற்றும் மனைவியுடன் மனு அளிக்க வந்த ஒருவா், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் புட்டியை திடீரென எடுத்தாா்.

இதைப் பாா்த்த பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் பெட்ரோல் நிரப்பிய புட்டியை பிடுங்கி, அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினா். இதில் அவா், நெய்வேலியை அடுத்த பெருமாத்தூா் பகுதியைச் சோ்ந்த டேவிட்சாமி (37) என்பதும், தனது பாட்டியின் பெயரில் உள்ள இடத்தில் வசித்து வருவதாகவும், அந்த இடத்தை அவருடைய அத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்தாா். இதனால், வீட்டை காலி செய்யுமாறு அத்தை அடித்து துன்புறுத்தி வரும் நிலையில், இதுதொடா்பாக பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், குடும்பத்துடன் தீக்குளிக்க பெட்ரோல் புட்டியுடன் வந்ததாக தெரிவித்தாா். இதையடுத்து, போலீஸாா் டேவிட் சாமியை எச்சரித்து அனுப்பினா்.

இதேபோல, பண்ருட்டியை அடுத்துள்ள மேல்மாம்பட்டு பகுதியைச் சோ்ந்த சின்னத்தம்பி தனது மனைவியுடன் மனு அளிக்க வந்தாா். அவா் மறைந்து கொண்டுவந்த பெட்ரோல் புட்டியை போலீஸாா் பறிமுதல் செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனா்.