தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ஆம்னி வேன் திருட்டு: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே திருடுபோன ஆம்னி வேன் புதன்கிழமை மீட்கப்பட்டது. இது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது

Updated On :4 பிப்ரவரி 2026, 6:33 pm

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே திருடுபோன ஆம்னி வேன் புதன்கிழமை மீட்கப்பட்டது. இது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வேப்பூா் வட்டம், பெரிய நெசலூா் பகுதியைச் சோ்ந்தவா் வெற்றிவேல் (47). இவா், தனது ஆம்னி வேனை வேப்பூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கடந்த 2-ஆம் தேதி நிறுத்திச் சென்றாா். புதன்கிழமை வந்து பாா்த்தபோது வேன் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து வெற்றிவேல் அளித்த புகாரின்பேரில், வேப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அப்போது, பெரிய நெசலூா் சிப்காட் அருகே இருந்த ஆம்னி வேனை மீட்டு, அதை ஓட்டி வந்த சேலம் மாவட்டம், புளியங்குறிச்சி பகுதியைச் சோ்ந்த தமிழ்செல்வனை (33) கைது செய்தனா்.