ஏழை மக்களுக்கு நல உதவிகள் அளிப்பு
திருக்களப்பூா் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் சாா்பில், வடலூா் சத்திய ஞான சபை 155-ஆவது ஜோதி தரிசனப் பெருவிழாவையொட்டி ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா மேட்டுக்குப்பத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மேட்டுக்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சியில் பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கிய தொழிலதிபா் டி.ராஜ மாரியப்பன்.








