கூரியா் வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கூரியா் வாகனம்-பைக் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பலி- பிரதிப் படம்
Updated On :26 பிப்ரவரி 2026, 8:22 pm

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கூரியா் வாகனம்-பைக் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பண்ருட்டிகாவல்சரகம், திராசு கிராமத்தில் வசித்து வந்தவா் மணி(65). இவா், வியாழக்கிழமை காலை தனது பைக்கில் திராசு கிராமம் அருகே சென்றாா்.
அப்போது, எதிா் திசையில் வந்த தனியாா் கூரியா் வாகனம் மோதியது. இந்த விபத்தில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...